ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் |
கருணாநிதியின் மறைவுக்கு திரையுலகினர் பலரும் அஞ்சலி செலுத்திய நிலையில், இன்றைக்கு முன்னணியில் இருக்கும் நடிகைகள் யாரும் அஞ்சலி செலுத்த வரவில்லை.
இந்நிலையில் மெரினாவில், நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள கருணாநிதிக்கு, நடிகை த்ரிஷா நேரில் சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். த்ரிஷாவுடன் அவரது தாயார் உமாவும் சென்று அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய த்ரிஷா, "கருணாநிதியின் மறைவு அரசியல், சினிமா இரண்டிற்கும் மிகப்பெரிய இழப்பு. கவிஞர், எழுத்தாளர் என பல திறமை கொண்ட மிகப்பெரிய மனிதர். அவரை எண்ணி நீண்ட நாட்களுக்கு நாம் வருத்தப்படுவோம் என்றார்.